இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ராமேஷ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 அதிவிரைவு படகில் வந்த இலங்கை இராணுவத்தினர் மீனவர்கள் மீது சரமாரியாக கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் சில மீனவர்களை அவர்கள் சிறைபிடித்துள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: