விருதுநகர் மாவட்டம் , சிவகாசி அருகே மருதுபாண்டியர் தெருவில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே மருதுபாண்டியர் தெருவில் சுடலை
என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர்
வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் பொழுது
கடையில் தீ பொறி ஏற்பட்டு தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக சிவகாசி
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
குடியிருப்பு பகுதிக்குள் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த
பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினர்
விரைந்து தீயை அணைத்ததால் , அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில்
தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்
துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
–கு.பாலமுருகன்