தனுஷ்-51 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ”கேப்டன் மில்லர்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆக்ஷன் பாணியில் உருவாகியிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: “அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை” – லாலு பிரசாத்!
இதனைத் தொடர்ந்து 6 நாட்களில் ரூ. 59 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடித்த அவரின் 50-வது படம் வெளியாகவுள்ளது . இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜன.17) பூஜையுடன் துவங்கியுள்ளது.
இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இப்படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். மேலும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.