முக்கியச் செய்திகள்தமிழகம்பக்திசெய்திகள்

வடகலை தென்கலை இடையே அடிதடி – கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வடகலை தென்கலை என இரு பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக வாய் சண்டை தள்ளுமுள்ளாக இருந்த பிரச்னை தற்போது அடிதடி, கொலை மிரட்டல் வரை சென்றது. 

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
திகழ்கிறது. தற்போது உலகமெங்கும் அத்திவரதர் கோயில் என பிரசித்து
பெற்றுவிட்டது. இந்நிலையில், ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து நேற்று (17.01.2024) புறப்பட்ட வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை,
திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம்
உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

சுவாமி பார்வேட்டைக்கு வரும் போது வடகலை தென்கலை சார்ந்தவர்கள்
திவ்ய பிரபஞ்சம் பாடி வருவது தொண்டு தொட்டு வருகிறது. இந்நிலையில்,வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக திவ்ய பிரபஞ்சம் யார்
முதலில் பாடுவது என்ற பிரச்னை உள்ளது. இது தொடர்பாக அனைத்து நீதிமன்றங்களும் வழக்கு பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

இந்த பிரச்னைக்கு தற்காலிகமாக சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது. அதன்படி, இருபிரிவினர்களும் இக்கோயிலில் திவ்ய பிரபஞ்சம் பாட தடை விதித்தது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. சுவாமி வைபவம் நடந்து கொண்டிருந்த போது வடகலை தென்கலை
இருபிரிவினர்களுகிடையே தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல் பாடி வரும்
போது, வடக்கலை தென்கலை சேர்ந்தவர்களுக்குள் வாய் சண்டை ஏற்பட்டது.

அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி  தாக்குவதும், தப்பி ஓடுவதும் அங்கிருந்து கூடி இருந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினர்களும் சென்று விட்டனர்.

மேலும், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் காஞ்சிபுரம்,
வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு
ஊர்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது அவர்கள் வடகலை தென்கலை என இரு பிரிவினரும் மோதிக் கொண்ட காட்சியை கண்டு வேதனையுடன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

Web Editor

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய சுகாதாரக் குழு

Halley Karthik

ஐபிஎல் 2023; ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

Jayasheeba

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading