போடியில் பெண் வனக்காவலரை கொலை செய்ததாக சிறப்பு காவல் படை காவலர் மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி தென்றல் நகர் பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகம் அருகே சரண்யா (27) தனியே வசித்து வந்தார். இவரது கணவர் பொண்ணு பாண்டி கடந்த 4ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இவர்களது இரண்டு குழந்தைகள் மதுரையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகின்றனர். வனக்காவலராக போடியில் பணியாற்றி வந்த சரண்யாவை கடந்த 12ஆம் தேதி, இரவு நேரத்தில் மூச்சு திணறவைத்து, தான் கொலை செய்ததாக மதுரை சிறப்பு காவல் பிரிவு போலீஸ் திருமுருகன் என்பவர் இன்று அதிகாலை மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவல் கிடைத்த போடி நகர் காவல்துறையினர் தென்றல் நகர் குடியிருப்பில் இருந்த சரண்யாவின் சடலத்தை நேற்று காலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
முதற் கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பால் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மதுரையில் சரணடைந்த திருமுருகனை விசாரணைக்கு அழைத்து வர போடி காவல்துறையினர் விரைந்துள்ளனர்.