தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் 2019-20-21 வரை மூன்று ஆண்டுகளுக்கு உண்டான பயிர் காப்பீட்டுக்கு பிரீமியம் தொகையை விவசாயிகள் சரியாக செலுத்தியுள்ளனர். ஆனால் இதுவரையில் இந்த பயிர்க்காப்பீட்டிற்கான தொகை 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை எனத் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவேங்கடம் தாலுகாவில் சுமார் 74,000 ஏக்கர் மானாவாரி விளை நிலங்கள் பயிரிடப்பட்டுள்ளது. அதில் 45,000 ஏக்கர் மக்காச்சோளம், 15,000 ஏக்கர் உளுந்து , 5 ஆயிரம் ஏக்கர் பருத்தி ஆகியவை நோய் தாக்குதலாலும் அதிக மழை பொழிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மனு அளித்தனர்.