36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் 2019-20-21 வரை மூன்று ஆண்டுகளுக்கு உண்டான பயிர் காப்பீட்டுக்கு பிரீமியம் தொகையை விவசாயிகள் சரியாக செலுத்தியுள்ளனர். ஆனால் இதுவரையில் இந்த பயிர்க்காப்பீட்டிற்கான தொகை 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை எனத் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருவேங்கடம் தாலுகாவில் சுமார் 74,000 ஏக்கர் மானாவாரி விளை நிலங்கள் பயிரிடப்பட்டுள்ளது. அதில் 45,000 ஏக்கர் மக்காச்சோளம், 15,000 ஏக்கர் உளுந்து , 5 ஆயிரம் ஏக்கர் பருத்தி ஆகியவை நோய் தாக்குதலாலும் அதிக மழை பொழிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மனு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading