கேளம்பாக்கத்தில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹேமந்த் குமார், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் ஒரு மாத ஆண் குழந்தை வீட்டில் இல்லாததை தொடர்ந்து, இன்று காலை தனது ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள ரயில் நிலையங்களுக்கு குழந்தை குறித்த அடையாளங்களை தெரிவித்து தீவிரமாக தேடிவந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடத்தப்பட்ட ஆண் குழந்தை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, உடனே சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது பொது சுகாதாரத்துறை
தகவல் கிடைத்ததும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் தேடினர். அப்போது, பிளாட்பாரம் ஒன்பதில் புறப்படத் தயாராக இருந்த மைசூர் விரைவு ரயிலில், டி 4 பெட்டியில் குழந்தையுடன் கணவன், மனைவி இருந்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில், அவர்களிடம் விசாரித்தபோது அவர்களிடம் இருந்த குழந்தை மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹேமந்த் குமாரின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடந்து, உடனடியாக குழந்தையை மீட்ட பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.