அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான இடங்களில் 5 மணி நேரத்திற்கு
மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் சொந்தமான 26 இடங்களில் இன்று காலை
முதலே லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் கடந்த 2011 -15, 2016 -2021 வரை பாஸ்கர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக இருந்த போது தனது வருமானத்திற்கு அதிகமாக 4.82 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை முதலே பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களிலும் மதுரை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் 8 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை
போலீசாரின் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பாஸ்கருக்கு ஆதரவாக அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி, பரமத்திவேலூர் எம்.எல்.ஏ சேகர் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பாஸ்கரின் ஆதரவாளர்கள் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.