பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டு விளங்கும் முருகப்பெருமான் சிற்பக்கலைச் சிறப்புடன் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு கரங்களில் முறையே வலது
புறம் அபாயம், அம்பு, கத்தி, அங்குசம், கொடி இடதுபுறம் வரதம், வில், வஜ்ரம், கேடயம், பாசம், மணி முதலியவற்றை தரிசித்து மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார்.
இங்கு சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 26ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளியதனைத் தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திருத்தேரை வடம்
பிடித்து இழுத்து துவங்கி வைத்தார்.
கீழ வீதியில் துவங்கிய தேரினை பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.