ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டி அம்மன் கோயிலில் பக்தர்களே கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனிதநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் திருக்கோயில்
உள்ளது. இக்கோயில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகுவிமரிசையுடன் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: மேட்டுப்பாளையம் சாலைகளில் உலா வரும் யானைகள்; பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத
நிகழ்வாக கருவறைக்குள் பக்தர்களே சென்று செல்லியாண்டி அம்மனின் சிலைக்கு
புனிதநீர் மற்றும் பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு முதல் தொடங்கியது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து அம்மனுக்கு புனித நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டுச் சென்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக புனித நீரில் மஞ்சள், திருநீர், இளநீர் மற்றும் நாணயங்களையும் கலந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சேறுபூசும் திருவிழா நாளை
நடைபெறுகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது உடலில் சேறு பூசியும், அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்த நிகழ்ச்சியின் காரணமாக நாளை பவானி நகருக்குள் போக்குவரத்தில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.