நாகை அரசுக் கல்லூரியில் புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளிபகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. நாகை அடுத்த செல்லூர்…

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளிபகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு
காட்சிகள் வெளியாகி உள்ளது.

நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த
நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிக்டாக் செயலி நீக்கம் – கனடா அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இந்நிலையில், இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் அவர்கள் பெற்றோர் முன் கல்லூரி முதல்வர் அவரது அறையில் வைத்து கண்டித்துள்ளார். அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியைச் சேர்ந்த டவுசர், லுங்கி அணிந்துகொண்டு வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர். ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல் திடீரென கல்லூரி மாணவர்களைத் தாக்க தொடங்கினர். இச்சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.