முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன்; தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகோவில் சில்லாலாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரின் மகன்கள் முத்துராஜ் மற்றும் நல்ல தம்பி. இதில் நல்லதம்பி லாரி டிரைவர் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன் தனது அண்ணன் முத்துராஜிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார். அத்துடன் தனது சொத்துகளை விற்றும் மனைவியின் நகைகளை விற்றும் ஆன்லைன் ரம்மியில் சூதாடி பணத்தை இழந்துள்ளார்.

மேலும் அவரது சித்தப்பா சுப்பையா ரெட்டி மகன் முத்துராஜ் என்பவரிடமும் பணம்
வாங்கியதில் தகாறு செய்து அவருடன் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன் முத்துராஜ் தனது தம்பி நல்லதம்பியிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதற்கு நல்லதம்பி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும் சில்லா நத்தம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என நல்ல தம்பி முத்துராஜிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் தனது சித்தப்பா மகன் முத்துராஜ் உடன் சேர்ந்து நேற்று இரவு தனது தம்பி நல்ல தம்பியை பண்டாரம் பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இன்று காலை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் இருவரும் சரணடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பண்டாரம் பட்டி காட்டுப்பகுதியில் கிடந்த நல்ல தம்பியின் உடலை
சிப்காட் காவல் துறையினர் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு ஊரக
துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நேரடியாக வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி
வருகிறார்.

தம்பி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த
அண்ணன் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமெரிக்காவை எச்சரிக்கும் புதின்!

G SaravanaKumar

மாண்டஸ் புயல்; சென்னையின் முக்கிய இடங்களில் கடல் சீற்றம்

EZHILARASAN D

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து

Gayathri Venkatesan