பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 431 பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், பொது கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை தலைமை செயலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் எனவும், செப்டம்பர் 7-ம் தேதி நீட் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொதுக்கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். செப்டம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிறகு, செப்டம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் அவர் கூறினார்.அக்டோபர் 13 முதல் 15ம் தேதி வரை 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.அனைத்து சாதி இட ஒதுக்கீட்டிலும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தார். அக்டோபர் மாதம் 29 முதல் 31ம் வரை 4-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் கூறினார். நவம்பர் மாதம் 15 முதல் 17-ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அவர் கூறினார்.