பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் 44 மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை இடையே காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரையும், செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரையில் காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையில் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது,
இந்நிலையில் பயணிகளுக்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே மறுமார்கமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது,







