3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

திரிபுரா, மேகாலய உள்பட 3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தலை ஆணையம் இன்று அறிவிக்கிறது. 2023ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று…

திரிபுரா, மேகாலய உள்பட 3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தலை ஆணையம் இன்று அறிவிக்கிறது.

2023ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்கள் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த மூன்று மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் வருகிற மார்ச் மாதம் முடிவடைய இருப்பதால் பிப்ரவரி மாதம் அதாவது அடுத்த மாதம் இவற்றிற்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று மதியம் 2.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேகாலயாவில் மார்ச் 12-ல், திரிபுராவில் மார்ச் 22-ல், நாகாலாந்தில் 12-ல் சட்டசபை பதவி காலம் நிறைவடைகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.