கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 2,205 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே பகுதியில் கடந்த செய்வ்வாய்கிழமை மாலையும் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு தெற்கு ஆப்கானிஸ்தானில் மீண்டும் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவலின் படி, இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு அருகே 160 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை







