இ-பதிவு இணையதள பழுது இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இ-பதிவு நடைமுறையுடன் பல்வேறு சேவைகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை இ-பதிவு இணையதளம் முடங்கியது. இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் இ-பதிவு செய்ய முயற்சித்ததால் இணையதளப் பக்கம் முடங்கியதாகவும், இன்று மாலைக்குள் முழுவதும் சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்தார். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.







