வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் ஏற்கெனவே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுப்பதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து கோவை குனியமுத்தூரில் உள்ள வேலுமணி வீடு, கோடம்பாக்கத்தில் உள்ள அவரது நண்பரின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குனியமுத்தூர் வீட்டில் 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. கோவையில் 35 இடங்களிலும், சென்னையில் 15, திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் என மொத்தம் 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 9ம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.