தமிழ்நாட்டு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.26.99.335/- கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.
சென்னை, மதுரை, நாகை, திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு உட்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.
சேலம் உடையாப்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், நெல்லை டவுன் இரண்டாம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், மயிலாப்பூர் சப்.ரிஜிஸ்டர் அலுவலகம், திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் என பல இடங்களில் இந்த சோதனை தொடர்ந்தது.
இதன் முடிவில், ரூ.26.99.335 கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகப்பட்சமாக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட அதிகாரி மற்றும் நிர்வாக பொறியாளர் ஆகியோரது அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ரூ.3,31,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.








