வேலூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் துரை தயாநிதி – மீண்டும் நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் மு.க.அழகிரி.…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் மு.க.அழகிரி. அவரது மகன் துரை தயாநிதி, திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படியுங்கள் : அதானி, அம்பானி குறித்த பிரதமர் மோடியின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலடி!

இந்நிலையில், துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மீண்டும் 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். துரை தயாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். முதலமைச்சரின் வருகையையொட்டி வேலூர் சிஎம்சி மருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.