பிரதமர் மோடிக்கு பரிசளித்த துபாய் வாழ் இந்திய வம்சாவளி சிறுவன்!

வரும் 22ம் தேதி இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் துபாயில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர்…

வரும் 22ம் தேதி இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் துபாயில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் பிரதமர் மோடிக்கு குடியரசு தின விழாவுக்காக பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதமர் மோடியின் Stencil potrait ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனிடம் இந்த ஓவியத்தை ஒப்படைத்துள்ளார். முரளிதரன் மூன்று நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது மாணவர் அவரை சந்தித்து தனது பரிசை வழங்கியுள்ளார்.

இதனை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாணவரின் திறமையை பாராட்டி அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply