சத்துணவு திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்திற்கான வேலைநாட்களை மட்டும் கணக்கிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவு பொருட்களுடனும், முட்டைகளையும் சேர்த்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கு மட்டும் ஒவ்வோர் மாணவருக்கும் தலா 5 முட்டைகள் வழங்கவும், மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.








