தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் வைத்து நல்லோர் வட்டம் சார்பில்
நடைபெற்ற இளைஞர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது.
விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில் இங்கு வந்துள்ள அனைத்து இளைஞர்,
இளைஞிகளுக்கும் விவேகானந்தரின் கனவை நினைவாக்கும் விதமாக புதிய உத்வேகத்தை இங்கிருந்து துவக்கி வைக்கிறோம் என தெரிவித்தார்.
மேலும், துணிவு படத்தின் டைரக்டர் வினோத் அவர்கள் , அவர் எடுக்கும் படத்தை அவரே ஒரு முறைக்கு மேல் பார்க்கமாட்டார், அவரிடம் சிறிய போண் தான் இருப்பதாகவும் கூறினார்கள். ஒரு படம் முடிந்தவுடன் அவரது செல்போண் நம்பரை மாற்றி விடுவதாகவும் கூறினார்கள். வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே விதமான மனநிலை என தெரிவித்தார்.
அத்துடன், 1995 ல் இந்தியா ஒரு ஆட்டம் பாம் வெடிக்க வேண்டும் என்பது நரசிம்ம ராவ் அவர்களின் ஆசை, ஆனால் அமெரிக்காவின் மிரட்டலால் அது நிறுத்தப்பட்டது. எனவும் அமெரிக்க சேட்டிலைட் பறக்கும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆட்டம் பாம் சோதனை நடப்பதை அமெரிக்கா பார்க்காத நேரத்தில் சோதனை செய்தனர் என கூரினார்.
அது வெடித்த பின்பு தான் அமெரிக்காவிற்கு தெரிந்தது. வாஜ்பாய் அவர்களிடம் துணிவு இருந்தது. அத்துடன் சமயோஜித புத்தி இருந்தது எனவும் பிரதமர் மோடி 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பணமதிப்பிழப்பு விசயத்தை சொன்னார். ஒரே நாளில் இது கொண்டுவரப்படவில்லை என பேசினார்.

நீதிமன்றத்தில் தற்போது இதற்கு சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அனைத்து தரப்பினருக்கும் எளிதாகியுள்ளது. 74 பில்லியன் முறை இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்துள்ளோம். மாதம் 10 லட்சம் கோடி பண பரிவர்த்தனை செய்திருக்கிறோம் என பேசினார்.
மாணவர்கள் மானசீகமான குருவை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். குரு இல்லாமல் வாழ்வது கடலில் எதிர்த்து நீச்சலிடுவது போன்றது. குருவோடு வாழ்வது கடலோடு சேர்ந்து நீச்சலடிப்பது போன்றது. என மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார். இந்நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழகத்தில் உள்ள 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.







