சென்னை மெரினா கடற்கரையில் காவல் துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை இருந்து வருகிறது. இந்தக் கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பொழுதை கழித்து வருகின்றனர். பலர் கடற்கரைச் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மெரினா கடற்கரைக்குச் சுற்றிப் பார்க்க வந்து கடலில் குளித்து மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீப நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலில் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் குளிக்க இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அதனடிப்படையில் மெரினா கடற்கரைப் பகுதியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உள்ளதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் கடற்கரை மணற் பரப்பில் ஆங்காங்கே காவல்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடையை மீறியும், காவல் துறையினரின் கண்காணிப்பைத் தாண்டியும் பொதுமக்கள் பலர் கடலின் ஆபத்தை உணராமல் தொடர்ந்து கடலில் குளித்து
வருகின்றனர். இந்நிலையில் காவல்துறைத் தரப்பில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் டிரோன் மூலம் காண்காணிப்புப் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று டிரோன்களைப் பயன்படுத்தி மெரினா கடற்கரை எல்லையில் பொதுமக்கள் யாரேனும் குளிக்க எண்ணி கடலுக்குள் இறங்கியுள்ளனரா? என
காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் கடலின் ஆபத்தை உணர்ந்து, தங்கள் உயிருக்கு முக்கியத்துவம் அளித்து கடலில்
குளிக்க எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.