12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆளுநராக இருப்பதால் அரசியல் கருத்துக்களை கூற முடியாது. நான் பாஜக மாநிலத் தலைவராக இருந்த போது கூட்டணி கட்சிகளுடன் மரியாதையுடன் இருந்துள்ளேன். தற்போதைய கூட்டணி கட்சித் தலைவர்களிடம் அரசியல் கருத்துகளை கேளுங்கள், இதற்குள் என்னையையும் இழுக்க வேண்டாம் என தெரிவித்தார் அவர் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது 8 மணி நேர வேலையா? 12 மணி நேர வேலையா? என தொழிலாளர்கள் விருப்பப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது தான் சட்டம். அதிக நேரம் வேலை செய்து விட்டு, அதிக நேரம் ஒய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை. 12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








