முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திருப்பதி தேவஸ்தான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 4 ஆண்டுகளில் கிடைத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவது, கோயில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த அறக்கட்டளைக்கு 2019 ஆம் ஆண்டு 26 கோடியே 25 லட்ச ரூபாய் நன்கொடையாக கிடைத்தது. 2020-ம் ஆண்டு 70 கோடியே 21 லட்ச ரூபாயும், 2021-ம் ஆண்டு 176 கோடி ரூபாயும் நன்கொடையாக கிடைத்தது

2022 ஆம் ஆண்டு 282 கோடியே 64 லட்ச ரூபாயை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி இருந்தனர். 2023ம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 268 கோடியே 35 லட்சம் ரூபாயை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

இதன் மூலம் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 970 கோடி ரூபாயும் அப்பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் வட்டியும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு, காவல் நிலையமாக விரிவுபடுத்தப்படும் -தமிழ்நாடு அரசு

Web Editor

PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

Web Editor

”அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது“ – காவேரி மருத்துவமனை அறிக்கை

Web Editor