பள்ளிக்கல்வி துறை என்பது மற்ற துறைகளை போன்று கிடையாது. இது ஒரு சமூக சேவையாக நாம் செய்து வருகிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் தலைமை பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தமிழகத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று நடைபெற்ற முகாமில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் சிறப்புரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், பள்ளிக்கல்வி துறை என்பது மற்ற துறைகளை போன்று கிடையாது. 4 பேர் பாராட்ட வேண்டும் என்று நாம் பணி செய்வதில்லை. சமூக சேவையாக நாம் இதை செய்து வருகிறோம். தனியார் பள்ளிக்கு குறைந்தவர்கள் நாம் கிடையாது. அரசு பள்ளிகள் தற்போது பல மடங்கு முன்னேறி இருக்கிறோம். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்த வரை தமிழக முதலமைச்சர் என்ன திட்டங்கள் கையில் எடுத்தாலும் அதற்கு அனுமதி கொடுக்கிறார். புது புது திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் தற்போது செய்யும் பணி யாருக்கும் தெரியாது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு பின்பு நாம் என்ன செய்தோம் என்று ஒரு கூட்டம் நம்மை பாராட்டும் என தெரிவித்தார்.