30.8 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு!

ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் கடிகாரம் தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, தமிழநாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி ‘DMK FILES’ என்ற பெயரில் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

DMK Files என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதும், தி.மு.க. நிர்வாகிகள் மீதும் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், அன்றே மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் அண்ணாமலை வெளியிட்ட அந்த சொத்து பட்டியலில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது அங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், தேர்தலின் போது அந்த நிறுவனங்களின் மூலமாக போது பணம் பரிமாற்றம் நடத்தப்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்க்கு, திமுக சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரை அண்ணாமலை சார்பில் அது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் மீது தி.மு.க சார்பில் முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்வதற்காக திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் வருகை தந்தனர். அங்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக குறித்து புளுகு மூட்டை அவிழ்த்து விட்டது போல் அனைத்தையும் பொய்யாக கூறியுள்ளார். திமுக குறித்த அவதூறுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். தவறான சொத்து பட்டியல் விளக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று டி ஆர் பாலு சார்பில் நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் காலம் ஆகியும் இன்னும் அண்ணாமலை எதுவும் செய்யவில்லை..

ஏற்கனவே முதலமைச்சர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது எனது சார்பிலும் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது . திமுக யார் மீது பொய் வழக்கு போட்டதில்லை.திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளதாகத்தான் வரலாறு. ஏற்கனவே கருணாநிதி பொருளாராக இருந்த போது 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நார்த்திகம் பத்திரிகை ஆசிரியர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து ஒராண்டு சிறை தண்டனை பெற்றுத்தந்தார்.தற்போது அண்ணாமலை மீது போடப்பட்ட வழக்கில் ஓராண்டு தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading