நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக
உதகை படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்ட படகு
போட்டியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம், இந்தாண்டு கோடை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை
மகிழ்விக்க பல்வேறு கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. கோடை விழாவின்
முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி வரும் மே 13,14
மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளது.இந்நிலையில், கோடை விழாவின் ஒரு நிகழ்ச்சியாக உதகை படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடைப்பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படகு போட்டியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியினர் போட்டி, பத்திரிக்கையாளர்களுக்கான போட்டி மற்றும் படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்க்கான போட்டி என தனித் தனியாக போட்டி நடைப்பெற்றது.
இதில் ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த நிஷாத் மற்றும் ஆசீப் முதலிடத்தை பெற்றனர். மேலும், பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் சென்னையை சேர்ந்த பரணி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முதலிடத்தையும், தம்பதியினர்களுக்கான போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த மிர்துன் ஜெய் மற்றுத் புரவி தம்பதியினர் முதலிடத்தையும் பிடித்தனர். மேலும், ஊழியர்களுக்கான துடுப்பு படகு போட்டி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் வெற்றி கோப்பைகளை வழங்கினார்.
கு. பாலமுருகன்