திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது; அமைச்சர் ராஜலட்சுமி குற்றச்சாட்டு!

திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது என சங்கரன்கோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எம் ஜி ஆரின் 104 வது பிறந்த…

திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது என சங்கரன்கோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆதி திராவிட நலத்துறை திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது அது எப்போதும் நடைபெறாது எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமைய உள்ளதாகவும் பேசினார்.

இப்பொது கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணா முரளி ,வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply