சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

உலகின் நம்பர் ஒன் வீரர் அல்கரசை வீழ்த்தி, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார். சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின்…

உலகின் நம்பர் ஒன் வீரர் அல்கரசை வீழ்த்தி, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்கரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்கரஸ் கைப்பற்றினார். இதன் பின்னர் தனது தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச், 2-1 என்ற செட்களை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ATP டென்னிஸ் வரலாற்றில் தனது 95 ஆவது பட்டத்தை கைப்பற்றி, இதற்கு முன்னதாக 94 பட்டங்களை வென்ற இத்தாலியின் இவன் லென்டில் ஐ பின்னுக்கு தள்ளி 3 ஆவது இடத்திற்கு முன்னேறினார். மேலும் முதல் இடத்தில் 109 பட்டங்களுடன் ஜிம்மி கார்ணர்ஸ், இரண்டாவது இடத்தில் 103 பட்டங்களுடன் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.