மாசித் திருவிழா பிப்.13-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், கையில் குழந்தைகளோடும், வாயில் அழகு குத்தியும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகத்தினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்