இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்திற்கு பேரணி சென்றார்களா?

This news Fact Checked by ‘IndiaToday’ பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசு மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு எதிராக இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாகச் செல்வதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த…

Did Imran Khan supporters march to Islamabad?

This news Fact Checked by ‘IndiaToday

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசு மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு எதிராக இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாகச் செல்வதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் போராட்டத்தை அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், அரசாங்கத்தின் அடக்குமுறையைத் தொடர்ந்து தற்போது வாபஸ் பெற்றுள்ளது. இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 துணை ராணுவப் படையினர் உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர்.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு எதிராக இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாகச் செல்வதைக் காட்டும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்த ஒரு பதிவு, “பிரேக்கிங்: பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஷேபாஸ் ஷெரீப் அரசு மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிருக்கு எதிராக லட்சக்கணக்கான பிடிஐ ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத் நோக்கி அணிவகுத்து வருவதால், பாகிஸ்தான் ராணுவம் அதன் அனைத்து வீரர்களின் விடுமுறையையும் ரத்து செய்தது. விரைவில் பாகிஸ்தான் ராணுவத்தின் மற்றொரு படுகொலையை நீங்கள் காண நேரிடும்.” என பகிரப்படுகிறது. அதன் காப்பகத்தை இங்கே காணலாம்.

செப்டம்பர் 10, 2024 அன்று போப் பிரான்சிஸின் வருகையைக் காண ஏராளமான மக்கள் கூடியிருந்த தென்கிழக்கு ஆசிய நாடான திமோர்-லெஸ்டேவில் இருந்து காணொளி என்பதை இந்தியா டுடே உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

கூகுளின் தலைகீழ் படத் தேடலின் உதவியுடன், செப்டம்பர் 12, 2024 முதல் பேஸ்புக் பதிவில் வைரலான வீடியோ காணப்பட்டது. அதில், “100% கத்தோலிக்க வேட்பாளரைக் கொண்ட நாட்டிற்கு போப் பிரான்சிஸ் வரலாற்று சிறப்புமிக்க வருகையை வரவேற்கிறோம்” என பகிர்ந்துள்ளனர். இதன்மூலம், இந்த வீடியோ இரண்டு மாதங்கள் பழமையானது என்றும் பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த போராட்டங்களுக்கும் தொடர்பில்லாதது என்பதும் தெளிவாகிறது.

அசோசியேட்டட் பிரஸ்ஸின் யூடியூப் சேனலில் போப் பிரான்சிஸின் திமோர்-லெஸ்டே வருகையின் மற்றொரு வீடியோ முக்கிய வார்த்தை தேடல் மூலம் கிடைத்தது. செப்டம்பர் 10-ம் தேதி இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது. செப்டம்பர் 9-ம் தேதி கத்தோலிக்க நாடான திமோர்-லெஸ்டேக்கு போப் பிரான்சிஸ் வந்தபோது ஆறு லட்சம் பேர் கலந்துகொண்டதாக AP-ன் யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான திமோர்-லெஸ்ட்டின் முன்னாள் பிரதிநிதியான கார்லிட்டோ நூன்ஸ், செப். 11 அன்று நிகழ்வின் புகைப்படங்களை வெளியிட்டார். புகைப்படங்களில் ஒன்று கூட்டத்தின் ஒத்த காட்சியைக் கொண்டுள்ளது.

அஞ்சே கப்ரால் என்ற பேஸ்புக் பயனரும் செப். 10 மற்றும் 11-ம் தேதிகளில் இதேபோன்ற பல வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். திமோர்-லெஸ்டேவின் தலைநகரான டிலிக்கு போப் பிரான்சிஸின் வருகைக்காக மக்கள் கூடியிருந்ததைக் காட்டுவதாகக் கூறினார். வைரல் வீடியோவை விட மிகவும் தெளிவான வீடியோ ஒன்று, ஒரு சுவரில் போப் பிரான்சிஸின் போஸ்டர்களைக் காட்டுகிறது. இந்த சுவரொட்டிகளில் திமோர்-லெஸ்டேவின் தேசியக் கொடியும் காணப்படுகிறது. வைரலான வீடியோவிலும் இதையே காணலாம்.

முடிவு:

எனவே, ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிய நிலையில், வைரலான வீடியோ அதற்கும் தொடர்பில்லாதது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘IndiaToday and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.