32.5 C
Chennai
April 25, 2024
தமிழகம் செய்திகள்

காவல் நிலையத்தில் டி.ஜி.பி திடீர் ஆய்வு – பெண் எழுத்தருக்கு ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் எழுத்தருக்கு ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வில்,  ஆவணங்களை முறையாக பராமரித்த சசிகலா என்ற பெண் எழுத்தருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கி டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார் .

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லும் வழியில், காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் முதல் தகவல் அறிக்கை பதிவேடு,  சிஎஸ்ஆர் ஜிடி ,  குற்றச் சம்பவப் பதிவேடு, அலுவலகப் பதிவேடு ஆகிய ஆவணங்களை  ஒவ்வொன்றாக பார்வையிட்டார்.
ஆய்விற்குப் பின்னர், பதிவேடுகளைச் சரியாக பராமரிப்பு செய்த சசிகலா என்ற பெண் எழுத்தருக்கு, ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி தமது பாராட்டை டி.ஜி.பி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, டி.ஜி.பி சைலேந்திர பாபுவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்  மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading