கும்பகோணம் அருகே, கீழக்கொட்டையூரில் உள்ள பாலமாரியம்மன்
ஆலயத்தின் 113-ம் ஆண்டு உற்சவத்தின் ஒரு பகுதியாக, 500-க்கும்
மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
கும்பகோணம் அருகே, கீழக்கொட்டையூர் வாணியத் தெருவில் உள்ளது பிரசித்தி பெற்ற பாலமாரியம்மன் கோயில். இந்த கோயிலின் 113வது ஆண்டு உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது. இதன் ஒரு பகுதியாக 500 க்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து, பால் குடம்
எடுத்து வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில், அருகில் உள்ள காவிரியாற்றில் இருந்து பால்குடம் எடுத்து, கீழக்கொட்டையூரின் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது.
மேலும், காவடி மற்றும் பால்குடம் பாலமாரியம்மன் ஆலயத்தில் நிறைவு
பெற்றுது. தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—-கு.பாலமுருகன்