31.5 C
Chennai
May 12, 2024
தமிழகம் பக்தி செய்திகள்

தேவிகாபுரம் பெரியநாயகி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்!

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர், கனககிரீஸ்வரர் ஆலய பங்குனி உத்திரம் மகா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடை பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று அருள்மிகு பெரியநாயகி சமேத பொன்மலை நாதர் என்று போற்ற கூடிய கனககிரிஸ்வரர் திருக்கோயில் அமைந்து உள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் பெருவிழாவில் மகா
தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் படி, இந்த ஆண்டு கடந்த மாதம் 26 ஆம் தேதி பங்குனி உத்திரம் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் ஆலயத்தில் பஞ்சமூர்த்தி அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டு ரத பிரதிஷ்டை ஹோமம் மற்றும் ரத பலி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தி மகா திரு தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் சேத்துப்பட்டு ஆரணி போளூர் வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்
திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் ராணிப்பேட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில்
இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்பொழுது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது.

—–ஶ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading