புதுச்சேரியில் வணிக கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
புதுச்சேரியில் உள்ள வணிக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனரா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் தலைமையில், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரி நகரப் பகுதியான புஸ்சி வீதியில், தடுப்பூசி செலுத்தாமல் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 8 மற்றும் பிரிவு 54(1)ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்படுவதாகவும், தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இதற்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.