தமிழகம்செய்திகள்

சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மண்டலம் மற்றும் வெளிமண்டல வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக்கணக்கான புலிகள், மான்கள், சிறுத்தை, புலி என பல விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சீகூர் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வழக்கம் போல் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.

இதனை மசினகுடி கோட்டம் துணை இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர், கள இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் யானையின் இறப்பிற்கு என்ன காரணம் என்று பிரேத பரிசோதனைக்கு பின் தெரிய வரும் என அதிகாரிகளின் ஆலோசானைப்படி பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வனஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்; கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

G SaravanaKumar

“உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”

Gayathri Venkatesan

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு – முடிவுகள் வெளியானது!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading