உருவாகிறது #Fengal புயல்… எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட்?

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய…

உருவாகிறது #Fengal புயல்... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட்?

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்திற்கு, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காண்போம்.

ரெட் அலர்ட்

கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

அத்துடன் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.