தமிழ்நாட்டில் புதிதாக 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,01,189 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 736 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,25,467 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 772 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,80,667 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,463 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 107 பேருக்கும் கோயம்புத்தூரில் 109 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களில் தலா ஒருவர், தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.








