குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஐப்பசி விசு திருவிழா இன்று அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேத திருவிலஞ்சிக்குமாரர் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைதொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு, 3ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சுவாமி, அம்மன் வெள்ளி ஏகசிம்மாசனத்திலும், திருவிலஞ்சிக்குமரன் மரச்சப்பரத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சுவாமி, அம்மன், திருவிலஞ்சிக்குமரன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.இந்த விழாவின் தொடர்ச்சியாக 12-ம் தேதியன்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 13-ம் தேதியன்று அதிகாலை 5.40 மணிக்கு அருள்மிகு விநாயகர், அருள்மிகு முருகன், திருக்குற்றாலநாதசுவாமி, குழல்வாய்மொழி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. காலை 8.50 மணிக்கு திருத்தேர்கள் வடம்பிடித்து இழுத்தல் நடைபெறுகிறது. 15-ம் தேதியன்று காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அருள்மிகு நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள் : அரியலூரில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
வரும் 16-ம் தேதியன்று சித்திரசபையில் காலை10.30 மணிக்கு நடராசமூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. கொடியேற்று விழாவில் முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், சொக்கம்பட்டி மாரியப்பன், காசிமேஜர்புரம் சுடலை, ராஜாமறவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.