இயக்குநர் லிங்குசாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ஒரு கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  …

நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ஒரு கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2014-ல் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கடனாக பெற்றுள்ளார்.

 

அப்போது கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைக்கு லிங்குசாமி வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை
நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரபட்டது. அந்த வழக்கில் இன்று சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சந்தோஷ், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமி தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.