இந்தியாவில், புதிதாக 15,981 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இது 5.7 சதவிகிதம் குறைவாகும்.
கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த தொற்று 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ,15,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு 3,40,53,573 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில், 17,861 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,99,961 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,980 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 97,23,77,045 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 9,23,003 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 58,98,35,258 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.








