மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கொரோனாவுக்கான தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார்.
இது குறித்து கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன் மீது மட்டுமல்ல பிறர் மீது அக்கறை கொண்டவர்களும், கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டுமெனவும், உடல்நோய்க்கான தடுப்பூசி உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், ஊழலுக்கான தடுப்பூசி அடுத்த மாதம் போடுவதற்கு தயாராக வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.







