வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், குற்றப்பின்னணி குறித்த விவரங்களை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் செய்தித்தாள்களில் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.