தமிழகத்தில் நாளை முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து; சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் 166 மையங்களில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையத்தில் முன்னேற்பாடு பணிகள்…

தமிழகத்தில் நாளை முதல் 166 மையங்களில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் 166 மையங்களில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி, அரசு வழிகாட்டுதலின் படி முன்கள பணியாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

உருமாறிய கொரனோவால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற போதிலும், முகக்கவசம் அணிவதில் மக்கள் அஜாக்கிரதையாக உள்ளது குறித்து சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply