கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக பரிசோதனைகள் குறைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.…

கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக பரிசோதனைகள் குறைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் பல முறை சிறை சென்றவர்.சுய மரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு உடையவர்.

ஏதாவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம். கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக பரிசோதனைகள் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் புதிய மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேரை சேர்த்து கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்குவதற்கு, மத்திய அமைச்சரை சந்திக்கும் போது, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.