தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592 ஆக உள்ளது.
இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 33 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 299 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்து 15 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது.







