நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டினால் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நெருக்கடியில் அரசு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு 5 ஆயிரத்து 880 ஆக இருந்த நிலையில், இன்று உச்ச பட்சமாக 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 830 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,76,002 என்றும், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 242 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய அளவிலான தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1500 முதல் 2000 வரை இருந்த நிலையில் தற்போது 7 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
#Unite2FightCorona#LargestVaccineDrive
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/FKxlLD2V9E pic.twitter.com/D2N63DunlM
— Ministry of Health (@MoHFW_INDIA) April 12, 2023
- பி.ஜேம்ஸ் லிசா