ரூ.1 கோடியை தாண்டிய ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை!!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் காணிக்கை எண்ணும் பணி யில் ரூ.1.14 கோடி இருந்தது. உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நிறைவு…

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் காணிக்கை எண்ணும் பணி யில் ரூ.1.14 கோடி இருந்தது.

உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நிறைவு பெற்றது. மொத்தமாக ரூபாய் 1 கோடியே 14 லட்சத்து 55 ஆயிரத்து 825 ரூபாய்
கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், ராமர் பாதம், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் பெறப்பட்ட
காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டன.

காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள், சேலம் மாவட்டத்தினைச்
சேர்ந்த தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காணிக்கை எண்ணும் பணியை மேற்கொண்டனர்.

காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. 1 கோடியே 14 லட்சத்து 55 ஆயிரத்து 825‌ ரூபாய் ரொக்கமும், 92 கிராம் தங்கமும், 3 கிலோ 250 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.